Description
காலம் ஒரு மஹா நதி. அது ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், 1978 – 79 ஆம் ஆண்டின் அந்த மார்கழி விடியல்கள் மாத்திரம் நம் இதயத்தின் நிலைக்கண்ணாடியில் இன்னும் அசையாமல் அப்படியே தங்கிவிட்டன. விடையல்-கருப்பூர் கிராமத்தின் எல்லையில், காவிரித் தாயின் மடியில் தவழ்ந்து வரும் குடமுருட்டி ஆற்றின் அந்த வெண்மணல் திட்டு, வெறும் மணற்பரப்பு அல்ல; அது பிரஹ்ம வித்தை பயின்ற ஒரு மஹா யாகசாலை!
அங்கே, அதிகாலைப் பனிப்புகையில், ஆற்று நீரின் சலசலப்பிற்கு நடுவே, ஒரு வெண்ணிற துணியையும், உடல் முழுதும் பூசிய திருநீற்றையும் அணிகலனாகக் கொண்டு, அத்வைதத் தேஜஸுடன் அமர்ந்திருந்த பரம குருநாதர் ஸ்ரீஅனந்தானந்தநாதர் அவர்கள் நமது ஸ்ரீஅருட்சக்தி குருஜி அவர்களுடன் உதிர்த்த முத்துக்களே இந்த ‘ஸ்ரீ திரிபுரா ரகசிய ஞானகாண்ட உரை – நதிக்கரையில் ஒரு ரகஸ்யம் என்ற பெயரில். ஒரு மகனாக அவர் மடியில் அமர்ந்து, ஒரு சீடனாக அவர் பாதம் பற்றி அடியேன் ரஸித்த இந்த ‘திரிபுராதாகம்’ இப்போழுது ஒரு மஹாஞான கங்கையாக இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது
.



Reviews
There are no reviews yet.